துருக்கியில் நிலநடுக்கம்: 3 பேர் பலி

அன்கரா, மே.20-
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள சிமாவ் நகரத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். 79 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜன்னல் மற்றும் பால்கனியில் இருந்து குதித்தவர்கள் ஆவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது