Posts

Showing posts from April, 2016

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

Image
பூந்தமல்லி, போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் பரவியது. அவர் தற்கொலை செய்து கொண்டதால், போதை மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். போதை மறுவாழ்வு மையம் சென்னை நொளம்பூர், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி(வயது 35). இவருடைய மனைவி அம்மு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. குப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக அவரை, மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். சுமார் 1 மாதம் அங்கு சிகிச்சை பெற்று வந்த குப்புசாமி, கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர், தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் போதை மறுவாழ்வு மையத்தில் தான் சிகிச்சை பெறும்போது குடியை மறக்கும்படி அங்கு பணி புரியும் ஊழியர்கள் தன்னை பலமாக தாக்கினார்கள் என்று கூறி வந்ததாக தெரிகிறது. வாலிபர் தற்கொலை இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றுமுன்தினம் குப்புசா

மதுவிலக்கை அமல்படுத்த பீஹார் தயார்:தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் நிதிஷ்

Image
. பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், முதல்வராக உள்ளார்.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். அதன்படி, 'ஏப்ரல், 1ம் தேதி முதல், பூரண மதுவிலக்கை அடையும் வகையில், முதற்கட்ட நடவடிக்கை துவங்கும்' என, சமீபத்தில் அறிவித்தார் நிதிஷ். இதையடுத்து, பீஹாரில் சாராய விற்பனை முற்றிலுமாக கைவிடப்படுகிறது. நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களில், மூன்றாவது இடத்தில் உள்ள பீஹாரில், 10 கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 6,000 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.இன்று முதல், நகர்ப் பகுதிகளில் உள்ள, 656 மதுக்கடைகளைத் தவிர, 38 மாவட்டங்களில் உள்ள மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.மீதமுள்ள மதுக்கடைகளும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பீஹாரில், 1977 - 78ல் அப்போதைய முதல்வர் கர்பூரி தாக்கூர் தலைமை யிலான அரசு, பூரண மதுவிலக்கை அறிமுகம் செய்தது. ஆனால், அது தோல்வியில்

நேர்மையான மின் நுகர்வோர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை: பிரகாஷ் ஜவடேகர் விமர்சனம்

Image
பியூஷ் கோயல் குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அளித்த விளக்கம் தொடர்பாக தற்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழக அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார். மேலும், மத்திய அரசின் தலைமையிலான மின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காமல், தமிழக அரசு மின்சாரம் திருடுபவர்களை காப்பதில்தான் ஆர்வம் காட்டி வருகிறது என்று பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: Uday திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நேர்மையான மின் நுகர்வோருக்கு சிறந்த பயன்கள் கிடைக்கும். ஆனால், நேர்மையான மின் நுகர்வோர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை. மாறாக விதிமுறைகளுக்குப் புறம்பாக மின் இணைப்பு செய்து கொள்பவர்கள், மின்சாரம் திருடுபவர்களை காப்பதில்தான் தமிழக அரசுக்கு ஆர்வம் உள்ளது போல் தெரிகிறது. இந்த திட்டம் 18 மாநிலங்களில் 90% மக்களால் ஏற்கப்பட்டுள்ளது, பாராட்டப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழகம் இதில் கையெழுத்திடவில்லை. ஒருநாள் இத்திட்டத்தின் பயன்களை உணர்ந்து தமிழக அரசும் கை

Kolkata flyover tragedy: Death toll rises to 21, around 150 people still trapped under debris

Image
A portion of a Vivekananda flyover near Ganesh Talkies in Girish Park collapsed on Thursday afternoon leaving as many as 21 dead and over 80 people injured. Several others, including a mini-bus carrying passengers, and cars are still trapped under the mounds of rubble. Eye-witnesses say that there could be around 150 people under the debris. Rescue operations are underway, with the light falling only making it more difficult for the army and the NDRF to carry on the rescue operations. While it was rumoured that the Army had entered into a tiff with the Kolkata Police officials resulting in the withdrawal of the troops, it issued a statement later in the evening that the allegations are baseless and that they are still at the spot carrying out the rescue operations. The flyover was the object of some controversy, with lots of residents complaining about it, particularly due to the congestion it caused. Locals complained that the Fire and Emergency Services and