Posts

Showing posts from March, 2016

உத்ரகாண்டை தொடர்ந்து தில்லி ஆட்சியையும் கவிழ்க்க சதி: கேஜரிவால் குற்றச்சாட்டு

Image
புது தில்லி:  உத்ரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தில்லி மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார். தில்லி பேரவையில் கேஜரிவால் ஆற்றிய உரை விவரம்: உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் சாசனத்தை சாகடிப்பதாக உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து தில்லி, ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. ஒரு பெரிய தொழிலதிபர் மூலம் தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்கு பாஜக முயற்சித்ததாக உளவுத் துறை அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். அடுத்து வரும் இரு ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஒரு இடத்தைக்கூட தங்களால் வெல்ல முடியாது என பாஜகவுக்குத் தெரியும்.  அதனால்தான் குண்டர்களின் ராஜ்யத்தை அவிழ்த்துவிட்டுள்ளது. தில்லியில் முதலில் 21 எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்யவும், பின்னர் 23 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவும் பா
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் விதை, உரம், டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்: ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விதை, உரம், பூச்சிமருந்து, டிராக்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த மாமல்லபுரம் அடுத்த எச்சூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.வி.கே.வாசு, மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காரணை ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எச்சூர் ஊராட்சி முன்னாள்  தலைவர் குமரேசன் வரவேற்றார்.  கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: ஒவ்வொருவரின் வாக்கும் விலை மதிக்கமுடியாதது. அப்படிபட்ட வாக்குகளை பணத்திற்காக விற்க கூடாது. ஊழல் கட்சிகளை புறக்கணிக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர். மக்கள் அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆவதற்கு மக்கள் முன்வந்து ஆவலுடன் இருக்கின்றனர். பா.ம.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, பூச்சிமருந