Posts

Showing posts from 2017

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்படுகிறார் . ...

ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தங்களுடைய கட்சி எம். எல். ஏக்களிடம் தனது நண்பர்கள் மற்றும் கட்சியினர் மூலம் தொடர்பு கொண்டு எல்லோரு ஓபிஎஸ் அணிக்கு செல்லுங்கள் என்று கூறி வருகிறார். எப்படியாவது எங்கள் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்' என்று கூறியுள்ளார தினகரனின் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறிய மு. க. ஸ்டாலின், 'தினகரன் தனது சுய விளம்பரத்திற்காக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை' என்று கூறியுள்ளார்..

டிரைவிங் லைசென்சுக்கு ஆதார் எண்னை கட்டாயமாகிறது

புதுடில்லி : டிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போதும், புதுப்பிக்கும் போதும் ஆதார் எண்ணை கேட்டு வாங்க மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரே நபர் பல இடங்களில் லைசென்சு வாங்குவது, போக்குவரத்து குற்றங்களிலிருந்து தப்பிக்க போலி லைசென்ஸ் வாங்குவதை தடுக்க முடியும். இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேட்டாபேஸ்: இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ் வழங்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும், வெவ்வேறு மாநிலங்களில்,வெவ்வேறு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மூலம் பல லைசென்ஸ் வாங்குவதை தடுக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் அடையாளத்தை கண்டுபிடிக்க ஆதார் மட்டுமே போதுமான அடையாளமாக இருக்கும். ஆதார் இல்லாதவர்கள் வேறு சில சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அளிக்கும் சான்றுகளை அதிகாரிகள் பதிவு செய்ய தேவையான மாற்றங்ளை மத்திய அரசு செய்து வருகிறது. இத

இளையராஜாவுக்கு கங்கை அமரன் கண்டனம்

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது ‘எஸ்.பி.பி.-50’ என்ற பெயரில் வெளி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இந்த இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் இசையில் தான் பாடிய பாடல்களையும் பாடி வருகிறார். இது தொடர்பாக எஸ். பி.பாலசுப்பிரமணியத்துக் கும், அவருடன் பாடும் சித்ராவுக்கும் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘நான் இசை யமைத்த பாடல்களை மேடைக் கச்சேரிகளில் பாடி னால் காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவேன்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எஸ்.பி.பால சுப்பிரமணியம் தனது ‘பேஸ்புக்‘ பககத்தில் பதில் அளித்தார். அதில், “காப் புரிமை சட்டம் பற்றி எனக்கு விழிப்புணர்வு கிடையாது. ஆனாலும் அந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.  நானும், எங்கள் குழுவின ரும் இனி இளையராஜா பாடல்களை மேடைகளில் பாட மாட்டோம். இளைய ராஜா தவிர பல இசையமைப் பாளர்களின் இசையில் நான் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனி வரும் கச்சேரிகளில் பாடுவேன்” என்றார். இந்த நிலையில் தான் இசையமைத்த பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மேடைகளில்

நடிகர் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை வழியே அழிப்பு

Image
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கோரி கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்துள்ளார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் நடிகர் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை வழியே அழிக்கப்பட்டுள்ளன என தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதுரை மருத்துவமனை டீன் முன்னிலையில் 2 மருத்துவர்கள் இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து விரிவான விசாரணையை வரும் 27ந்தேதிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது.

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் குறித்து முடிவு செய்ய மார்ச் 23ல் உயர்நிலைக் கூட்டம் கூடுகிறது

Image
புதுடெல்லி, தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.குறிப்பாக காவிரி பாசன விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. பயிர்கள் காய்ந்து போனதை கண்டு மனம் உடைந்த விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரண நிதி, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடுப்பில் இலை தழைகளை கட்டிக்கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அவர்களை அரசியல் கட்சித்தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளநிலைய

மத்திய பிரதேசத்தில் எஸ்.பி.ஐ. வங்கியில், பணம் எடுத்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்கிறார் தலைமையகம் விழாக் கோலம்

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்தனர். அந்த தீர்மான நகலை முதல் &அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தம்பித்துரை, பொன்னையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கி பொறுப்பேற்க சம்மதம் கேட்டனர். அவர்களின் கோரிக் கையை ஏற்று பொதுச்செயலாளராக சசிகலா சம்மதம் தெரிவித்தார்.நேற்று சசிகலா மெரீனா கடற்கரை சென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.,  அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்து 12 மணிக்கு பதவியேற்க உள்ளார். முறைப்படி பொதுச் செயலாளர் பணியினை தொடங்க உள்ள சசிகலாவை வரவேற்க தலைமையகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. சசிகலாவை வாழ்த்தி வரவேற்கும்பேனர்கள் லாயிட்ஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் ஜெயலலிதாவுடன் சசிகலா இருக்கும் பிளக்ஸ் பேனர்கள் அடுக்கப்பட்டுள்ளன. சசிகலாவின் புகழ்பாடும் "தியாகத் தாயே" "சின்னம்மா வருக" போன்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் சுவரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பகுதியில் காவல்துறையின் கெடுபிடி தீவிரமடைந்துள்ளன. நேற்றிரவ

பிரான்கோயிஸ் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கிரேக்க தூதர் கிரியகோஸ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேசிலில் கிரேக்க தூதராக பணியாற்றியவர் கிரியகோஸ் அமிரிதிஸ் (59), இவர் பிரேசிலியாவில் உள்ள தூதரக அலுவலக குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டை கொண்டாட ரியோ டிஜெனிரோவுக்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் புறநகரான நோவா இருவாச்சு என்ற இடத்தில் தங்கியிருந்த போது திடீரென மாயமாகி விட்டார்.  அவரை பணத்துக்காக யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. எனவே அவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். ஆனால் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒரு பாலத்துக்கு கீழ் காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடல் கரிக்கட்டை யாக கிடந்தது. தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் கிரேக்க தூதர் கிரியகோஸ் அமிரிதிஸ் எரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.  அதை தொடர்ந்து கொலையாளி யார்? ஏன் அவர் கொலை செய்யப்பட் டார் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப் பட்டது. அதில் அவரை மனைவி பிரான்கோயிஸ் (40) கொலை செய்தது தெரிய வந்தது.இவர் பிரேசிலை சேர்ந்தவர். இவர்களுக்கு 10 வயதில் மகள் இருக்கிறாள். இந்த நிலையில் பிரான் கோயிசுக்கும், பிரேசிலை சேர்ந்த போலீஸ் அ

அகிலேஷ் யாதவ் முலாயம் சிங்- தனித்தனியாக ஆலோசனை கூட்டம்

உத்தரபிரதேசத்தில் ஆளும்  சமாஜ்வாடி கட்சியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், சமாஜ்வாடியில்  அதிகாரத்தை கைப்பற்றுவதில் அக்கட்சி யின் நிறுவனரான முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், முதல்-மந்திரியுமான அகிலேஷ்    யாதவுக்கும் மோதல் உருவானது. முலாயம்சிங்குக்கு ஆதர வாக அவரது தம்பியும், மாநில சமாஜ்வாடி தலைவரு மான சிவபால் யாதவ் வலது கரமாக இருந்து செயல்பட்டு வருகிறார். அகிலேஷ் யாத வுக்கு ஆதரவாக முலாயம் சிங்கின் சித்தப்பா மகனும் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான ராம் கோபால் யாதவ் இருக் கிறார். இதனால் சமாஜ்வாடி யில் மூத்த தலைவர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந் துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே நீருபூத்த நெருப்பாக இருந்து வந்த மோதல் முலாயம்சிங் யாதவ் 325 பேர் கொண்ட வேட் பாளர் பட்டியலை வெளி யிட்டதும் பூதாகரமாக வெடித்தது. அந்த வேட்பா ளர் பட்டியலை ஏற்காத அகிலேஷ் யாதவ் நேற்று முன்தினம் இரவு 235 தொகுதிகளுக்கான போட்டி வேட்பாளர்  பட்டியலை வெளியிட்டார்.இதனால் கடும் அதிருப்தி அடைந்த முலாயம்சிங் யாதவ் நேற்றிரவு முதல்-மந்திரி அகிலேஷ்