Posts

Showing posts from 2014

அஞ்சான் விமர்சனம்

Image
இயக்குநர் லிங்குசாமியின் எழுத்து, இயக்கத்தில் 'சிங்கம்' சூர்யா நடித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் ''அஞ்சான்''. இது யாருக்கும் அஞ்சாத சிங்கமா.? சூர்யாவின் வெற்றி பட வரிசையில் சொக்கத் தங்கமா.? என்பதை இனி இங்கு உரசிப்பார்ப்போம்...! கதைப்படி, மும்பையில் தாதாவாக திகழ்ந்து, தகவலே இல்லாமல் போன தன் அண்ணன் சூர்யாவை தேடி கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இரயிலேறுகிறார் மாற்று திறனாளி தம்பி சூர்யா. மும்பை இரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கியதும், அந்தேரி ஏரியாவுக்கு அண்ணன் சூர்யாவைத் தேடி டாக்ஸி பிடிக்கும் தம்பி சூர்யாவை, வாங்க அந்தேரி என வரவேற்கும் டாக்ஸி டிரைவர் காமெடி சூரியை கூடவே கூட்டிக் கொண்டு வழக்கமான தமிழ் சினிமா பாணியில் அண்ணனைத் தேடாமல், தனி ஆளாக அண்ணன் சூர்யாவை தேடுகிறார் தம்பி சூர்யா. ஒரு கட்டத்தில் அண்ணன், தம்பி இருவர் அல்ல... இருவரும் ஒருவர்தான், ஒரே சூர்யா தான் எனும் உண்மை உலகுக்கும் (மும்பை நிழல் உலகுக்கும்...) உங்களுக்கும் (ரசிகர்களுக்கும்...) தெரிய வரும்போது 'அஞ்சான்' பதினாறடி பாஞ்சானாக

உங்களுடைய பிரதம சேவகன் நான்: டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மோடி உருக்க

புதுடில்லி: இந்த நாட்டின் பிரதம மந்திரியாக நான் உங்கள் முன் நிற்கவில்லை; உங்களுடைய பிரதம சேவகனாக நிற்கிறேன் என்று பிரதமர் நரேந்திரமோடி தமது சுதந்திர தின உரையில் உருக்கமாக கூறினார். சுதந்திர தினத்தை ஒட்டி இன்று காலை மகாத்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, காலை 07:30 மணி அளவில் செங்கோட்டை வந்தார். அங்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் அவர் செங்கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு: உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் நாட்டின் பிரதம சேவகன் என்ற முறையில் என் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்; நான் நாட்டின் பிரதம மந்திரியாக உங்கள் முன் நிற்கவில்லை; உங்களுடைய பிரதம சேவகனாகவே நிற்கிறேன்; இந்த சுதந்திரத்திற்காக பல தலைமுறைகள் தங்களின் இளமையையும் வாழ்க்கையும் தியாகம் செய்துள்ளனர்; அவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்; இது போன்ற தினங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முன்னுதாரணம்; இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான உந்துசக்தி; இந்த

நீதித்துறையும், நிர்வாகமும் எந்தவித தலையீடுமின்றி செயல்பட வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

புதுடில்லி: நீதித்துறை, பார்லிமென்ட், நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு பரஸ்பர மரியாதை உள்ளதாகவும், மூன்று துறையும் எந்தவித தலையீடுமின்றி செயல்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களில் நீதிபதிகளை தேர்வு செய்ய, தற்போது, 'கொலிஜியம்' என, அழைக்கப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழு உள்ளது. இந்த முறையை மாற்றி, 'நீதித் துறை நியமனங்கள் ஆணையம்' ஒன்றை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.இது தொடர்பான மசோதாவும், அந்த ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவும், லோக்சபாவில், நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாக்கள், நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டில், தேசியக்கொடியை ஏற்றிய தலைமை நீதிபதிலோதா , பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், நீதித்துறை, நிர்வாகத்துறை மற்றும் பார்லிமென்டில் உள்ளவர்களுக்கு பரஸ்பர மரியாதை அளித்து சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். மூன்று து

மர்மமான முறையில் 3 தொழிலதிபர்கள் மரணம்

புதுடில்லி: டில்லியில் 3 தொழிலதிபர்கள், மர்மமான முறையில் காரில் இறந்து கிடந்தனர். ஆர்.கே.புரம் பகுதியில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்ததில் அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த அவர்கள், நிஷந்த், பல்வீந்தர் மற்றும் லஷ்மன் எனவும், இவர்கள் நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில், பல்வீந்தரின் காரில் இறந்து கிடந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திற்கு 2 ரயில் திட்டங்கள் குறித்து ஆய்வு; சதானந்தா கவுடா

புதுடில்லி: ரயில்டே பட்ஜெட் குறித்து பேசிய சதானந்தா கவுடா, சென்னை-புதுவை-ராமநாதபுரம்-கூடங்குளம்- கன்னியாகுமரி இடையே ரயில்பாதை அமைப்பது பற்றியும், கும்பகோணம்- விருத்தாசலம் இடையே ரயில்பாதை அமைப்பது பற்றியும் ஆய்வு செய்யப்படும் எனவும், 3 முன்னுரிமைகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை நிறைவு செய்யவும், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்களை தொடர்ந்து இயக்கவும், பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமைஅளித்தும் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சூரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா ரசிகர்கள்...!

'அஞ்சான்' படத்தின் பாடல்கள் திரையீடு, டிரைலர் திரையீடு இவற்றோடு சத்தமில்லாமல் இசை வெளியீட்டையும் இன்று நடத்தி முடித்துவிட்டார்கள். விழா நடைபெற்ற சத்யம் திரையரங்கினுள், ஐந்தடிக்கு ஒரு 'அஞ்சான்' பேனர் என வழி நெடுகிலும் கண்ணைப் பறிக்கும் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. படத்தில் பாடல்கள் உருவான விதத்தைப் பற்றி இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா, கபிலன், மதன் கார்க்கி ஆகியோர் பேசி முடித்ததும், படத்தில் நடித்த நடிகர்களை அடுத்து மேடை ஏற்றினார்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளர் யாரோ எழுதிக் கொடுத்த கேள்விகளைக் கேட்கக் கேட்க மற்றவர்கள் பதில் சொன்னார்கள். படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்த சூரியிடம், அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தைப் பற்றிக் கேட்ட போது சூரி, “படத்துல நான் ஒரு டாக்சி டிரைவரா நடிச்சிருக்கேன். சூர்யா மும்பைக்கு முதன் முதலாக வந்து இறங்கும் போது...அவர் என்னைதான் முதல்ல சந்திப்பாரு....” என பேச ஆரம்பித்தார். அப்போது எதிரில் அமர்ந்திருந்த சூர்யா ரசிகர்கள், “கதையைச் சொல்லாத...கதையைச் சொல்லாத” என குரல் எழுப்பினார்கள்.

தெலுங்குப் படங்களை தவிர்க்கிறாரா ஸ்ருதிஹாசன்...!

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ்ப் படங்களை விட தெலுங்கப் படங்கள்தான் ஒரு மார்க்கெட் அந்தஸ்தைக் கொடுத்தன. தமிழில் அவர் நடித்த '3, 7ம் அறிவு' ஆகிய படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், தெலுங்கில் அவர் நடித்த 'கப்பார் சிங்' படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தொடர்ச்சியாக நல்ல வெற்றியையும், தெலுங்கத் திரையுலகில் முன்னணி நடிகை என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்தன. சமீபத்தில் வெளிவந்த 'ரேஸ் குர்ரம்' படம் வரை ஸ்ருதியின் தெலுங்கு மார்க்கெட் ஸ்டடியாகவே உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக தெலுங்கில் புதுப் படங்களில் நடிக்க ஸ்ருதிஹாசன் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையாம். தற்போது மகேஷ் பாபுவுடன் ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதே சமயம் தமிழில் விஷாலுடன் 'பூஜை' படத்தில் நடித்து வருகிறார்., விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். அதோடு நான்கைந்து ஹிந்திப் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். தமிழில் பெரிய ஹீரோக்களுடன் படங்களில் நடி

2 வது டெஸ்ட்: லார்ட்ஸில் 28 ஆண்டுகளுக்கு பின் சாதித்த இந்தியா, 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

கடந்த 17 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச தீர்மானித்தது. இத்னைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்சில் ரகானே சிறப்பாக ஆடிய 103 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜிஎஸ் பல்லன்ஸ் 110 ரன்களும், பிளன்கட் 55 ரன்களும் குவித்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 342 ரன்களுக் ஆட்டம் இழந்தது. முரளி விஜய் 95 ரன்களும், ரவீந்தர் ஜடேஜா68 ரன்களும், புவனேஸ்வர் குமார் 52 ரன்களும், குவித்தனர். இதனையடுத்து 319 ரன்கள் எடுத்தால் வெற்றிய என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்கள் கூக் 22 ரன்களுடனும், ரோம்சன் 7 ரன்களுடனும், பல்லான்ஸ் 27 ரன்களுடனும், பெல் ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து  நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.  இதனைத்தொடர்ந்து கடைசி நாளான  இன்

மத்திய அரசுக்கு எதிராக இயக்கம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கோல்கட்டா: விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மோடி அரசுக்கு எதிராக இயக்கம் ஒன்று நடத்தப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். கோல்கட்டாவில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மேற்கு வங்க மாநிலத்தில், ஒரு பெரிய அரசியல் சக்தியாக பா.ஜ., உருவாக முடியாது. மத்தியில் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பெட்ரோல், டீசல் விலையையும், ரயில் கட்டணத்தையும் உயர்த்தி விட்டது. தேர்தலுக்கு முன் பல விஷயங்கள் பற்றி பெரிதாகப் பேசிய பா.ஜ.,வினர் ஆட்சிக்கு வந்த பின் அதற்கு முரணமாக நடக்கின்றனர். அதனால் விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மோடி அரசுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக இயக்கம் ஒன்று நடத்தப்படும். மேற்கு வங்கத்தில் மதவாத கட்சிகளுக்கு இடமில்லை. லோக்சபா தேர்தலில் இரண்டு இடங்களைப் பிடித்தும் ஏதோ பெரிய அளவில் சாதித்து விட்டதாக பிரசாரம் செய்கின்றனர். பொய்களை அள்ளி விடுகின்றனர். இரண்டு இடங்களுக்கு மேல் அவர்களால் எப்போதும் பெற முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கட்ஜூ குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: கே.ஜி. பாலகிருஷ்ணன்

புதுடில்லி: நீதிபதி பணி நீட்டிப்பு விவகாரத்தில் மார்கண்டேய கட்ஜூவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, சென்னை ஐகோர்ட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதி ஒருவரை பணியில் தொடர்ந்து நீட்டிக்கச் செய்ய அரசியல் ரீதியாக வற்புறுத்தல் இருந்ததாகவும், அதை அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் மார்கண்டேய கட்ஜூ தெரிவித்திருந்தார். கட்ஜூவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலளித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இவ்விவகாரத்தில் கட்ஜூ குற்றம் சாட்டுவது தமக்கு ஆச்சர்யமளிப்பதாகவும், யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். கட்ஜூவின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மும்பை வணிக வளாகத்தில் தீ

மும்பை: மும்பை நகர பகுதியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் பணியில், ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 21 மாடி கட்டடத்தில் உச்சிப்பகுதியில் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு தீயணைப்பு வீரர் பலியானார். இன்னும் 28 பேரை மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்பை, அந்தேரி பகுதியில் உள்ள லோட்டஸ் என்ற புகழ் பெற்ற வணிக வளாகத்தின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. புகை மூட்டம் காரணமாக ஒருவர் மூச்சுத்திணறி பலியானார். 13 முதல் 21 மாடிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் தீயணைப்பு வீரர்கள் சிக்கியிருப்பதாக தெரிகிறது.

மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஜூலை 21-ல் மதிமுக முற்றுகைப் போராட்டம்: வைகோ

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வலியுறுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஜூலை 21-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், இதனை உறுதி செய்ய, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அரசியல் சட்டத்தின்படி அதிகாரம் கொண்ட காவிரி நடுவர் நீதிமன்றம் 5-2-2007-ல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட காங்கிரஸ் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் கால தாமதம் செய்தது. உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்த பிறகே 19-2-2013-ல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு, 24-5-2013-ல் சட்டப் பூர்வ அதிகாரம் இல்லாத மேற்பார்வைக் குழுவை அமைத்தது. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்தபோது இக்குழ