கேரள ஆளுநர் சதாசிவம் கஜா புயல் நிவாரண நிதி ரூ.1 லட்சம் வழங்கினார்

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பினை சந்தித்தன.
கஜா புயலின் தாக்குதலால் எண்ணற்ற தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. 

இந்த புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர்.

கஜா புயலால் பாதிப்படைந்த பொதுமக்களில் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறுவதற்காக திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பெரிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள ஆளுநர் சதாசிவம் தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் தொகையை தமிழக முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

தமிழக முதல் மந்திரி அலுவலகத்திற்கு இதற்கான காசோலை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என ராஜ் பவன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது