ரஷ்ய விமானம் கடலில் விழுந்து விபத்து: 91 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான விமானம் கருங்கடலில் விழுந்ததில் 91 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவின் சோச்சி என்ற நகரில் கிளம்பிய, டியு - 152 ரக விமானத்தில் 83 யபணிகளும், விமான படையை சேர்ந்த 8 வீரர்களும் இருந்துள்ளனர். இந்த விமானம் சிரியாவின் லடாகியா என்ற நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், ரேடார் கருவியில் உள்ள சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தை முழுமையாக தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் கருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தின் உதிரி பாகங்களும், உடல்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய மீடியாக்கள் கூறியுள்ளன.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது