இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடி யாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.

இதே போல வெளியூரில் இருந்த  எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வரும்படி உத்தரவிடப்பட்டது.இதைத்  தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்தனர். அவர் கள் அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களின் அவசர கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 11 மணிக்கு நடந்தது  இந்த கூட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த அவசர கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கூட்டத்தில்  சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம்,தேர்ந்து எடுக்கபட்டதாக தகவல் வெளியிடபட்டது.

சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில்  இன்று 6 மாலை  மணிக்கு மீண்டும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு