உத்ரகாண்டை தொடர்ந்து தில்லி ஆட்சியையும் கவிழ்க்க சதி: கேஜரிவால் குற்றச்சாட்டு

புது தில்லி: உத்ரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தில்லி மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.
தில்லி பேரவையில் கேஜரிவால் ஆற்றிய உரை விவரம்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் சாசனத்தை சாகடிப்பதாக உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து தில்லி, ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சித்து வருகிறது.
ஒரு பெரிய தொழிலதிபர் மூலம் தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்கு பாஜக முயற்சித்ததாக உளவுத் துறை அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார்.
அடுத்து வரும் இரு ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஒரு இடத்தைக்கூட தங்களால் வெல்ல முடியாது என பாஜகவுக்குத் தெரியும்.  அதனால்தான் குண்டர்களின் ராஜ்யத்தை அவிழ்த்துவிட்டுள்ளது.
தில்லியில் முதலில் 21 எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்யவும், பின்னர் 23 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
பதான்கோட்டில் பாகிஸ்தான் விசாரணை
பதான்கோட் சம்பவம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு கேஜரிவால் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
பாகிஸ்தானையும், ஐக்கிய நாடுகள் சபையையும் திருப்திபடுத்துவதற்காகவே மோடி இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். உலக சமாதானத்துக்கான நோபல் பரிசை பெறுவதற்காகவும், அமெரிக்காவை திருப்திபடுத்தவுமே மோடி பாகிஸ்தான் விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவில் விசாரணை செய்வது போன்று, இந்தியப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாகிஸ்தான் சென்று அங்கு விசாரணை நடத்த வேண்டும் என்றார் கேஜரிவால்.

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது